sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்

/

காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்

காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்

காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்


ADDED : ஜூலை 18, 2024 04:10 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை கைதி மற்றும் விசாரணை கைதிகள் இருக்கின்றனர். இந்நிலையில், எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில், சிறை காவலர்கள் சிறையில் நேற்று திடீரென சோதனை செய்தனர். அப்போது சிறை வளாகத்தில் உள்ள தோட்டங்கள், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.

இதில் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு மொபைல் போனை போலீசார் கண்டுபிடித்தனர். அதே போல, கைதி அறையில் சோதனை செய்த போது, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பரமசிவம் என்பவரிடம் இருந்து ஒரு மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி, சிறை காவலர்கள், காலாப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us