ADDED : ஜூலை 31, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், கருவடிக்குப்பம் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
கருவடிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகி வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து, உழவர்கரை நகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு உத்தரவின் பேரில், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கருவடிக்குப்பம், சாந்தி நகர், லட்சுமி நகர், நெசவாளர் நகர் பகுதிகளில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில், கொசு மருந்து தெளித்தனர். அதே போன்று, காலியான இடங்கள், சாலைகள், குப்பைகள் கிடந்த இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
