ADDED : ஜூலை 28, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
: அரியாங்குப்பம்: வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
தவளக்குப்பம் அடுத்த பிள்ளையார் திட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி மகள் பத்மபிரியா, 23; இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்றவர் இரவு வரை வீட்டுக்கு வரததால் சந்தேகமடைந்த அவரது தாய் மொபைலில் தொடர்பு கொண்ட போது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது.
உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தாய் கீதா புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
