/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா
/
முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா
ADDED : மே 20, 2024 05:13 AM

நெட்டப்பாக்கம் : ராம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்தலாம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணியர், விஷ்னு துர்கை, காத்தவராயன், பரசுராமர், பூர்ண புஷ்கலா சமேத அய்யனாரப்பன், முத்தால் வீரன் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த 17ம் தேதி காலை 7.00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துன் துவங்கியது.
அன்று மாலை 4.00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. 18 ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, நேற்று காலை 5.00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, சுவாசினி பூஜை, தம்பதி, வடுக பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு முத்தலாம்மன் மூலவருக்கு கும்பாபிேஷகம் விழா நடந்தது. 11.00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. இரவு 9.00 மணிக்கு முத்தலாம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பரமணியர் சுவாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

