/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா
/
முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா
ADDED : செப் 10, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி காலை அம்மனுக்கு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு 108 பால்குட அபி ேஷகமும், மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கும்பம் படைத்தல், பொட்டு சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை மாலை 3 மணிக்கு அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், 13ம் தேதி மாலை 3 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 14ம் தேதி காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

