sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுபான ஆலை அனுமதிக்கு ரூ.15 கோடி லஞ்சம் நாராயணசாமி திடுக் குற்றச்சாட்டு

/

மதுபான ஆலை அனுமதிக்கு ரூ.15 கோடி லஞ்சம் நாராயணசாமி திடுக் குற்றச்சாட்டு

மதுபான ஆலை அனுமதிக்கு ரூ.15 கோடி லஞ்சம் நாராயணசாமி திடுக் குற்றச்சாட்டு

மதுபான ஆலை அனுமதிக்கு ரூ.15 கோடி லஞ்சம் நாராயணசாமி திடுக் குற்றச்சாட்டு


ADDED : மார் 15, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: மதுபான ஆலை ஒவ்வொன்றிற்கும் ரூ. 15 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது என, மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காரைக்காலில் அவர் கூறியதாவது;

என்.ஆர்., காங்., பா.ஜ., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. புதுச்சேரி, காரைக்காலில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், கோவில் நில மோசடிகள் அதிகரித்துள்ளன.

கடந்த காங்., ஆட்சியில் தேசிய கல்விக்கொள்கைணய ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அவசரமாக அமல்படுத்தியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைக்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். ஒவ்வொரு மதுபான ஆலைக்கும் ரூ.15 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். காரைக்காலில் தரமான சாலை, மருத்துவ வசதி இன்றி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு காரைக்காலில் மருத்துவ கல்லுாரி துவங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை செயல்படுத்தவில்லை என, கூறினார்.






      Dinamalar
      Follow us