sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

/

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி


ADDED : மார் 13, 2025 06:52 AM

Google News

ADDED : மார் 13, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: இயற்கை விவசாய இடு பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்த பண்ணை பள்ளி குடியிருப்புபாளையம் கிராமத்தில் நடந்தது.

வேளாண் துறை பாகூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின், ஆத்மா திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குநர் (பொறுப்பு) குமாரவேலு தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் பரமநாதன், காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர் பிரபு, முன்னோடி விவசாயி கூனிச்சம்பட்டு வீரப்பன், ஆத்மா மேலாளர் ஆறுமுகம் ஆகியோர், ஜீவாமிர்த கரைசல், முட்டை அமினோ அமில கரைசல், பஞ்சகவ்யா மற்றும் திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் தயாரிப்பு முறை பற்றி செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.

அரங்கனூர் கிராமத்தில் இயற்கை முறையில் தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் பயிரிட்டு, ஒரு செடியில் இரண்டு முதல் மூன்று கிலோ வரை அதிக விளைச்சல் எடுத்த விவசாயி திருஞானமூர்த்தியை, வேளாண் அதிகாரிகள் பாராட்டினர். இயற்கை விவசாயி தங்கவேல் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பாகூர் மற்றும் சேலியமேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் பாஸ்கரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் முத்துகுமரன், செயல் விளக்க உதவியாளர்கள் குணசீலன், பிரபா சங்கர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us