/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை
/
பிளம்பரை தாக்கிய 4 பேருக்கு வலை
ADDED : ஆக 18, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முன்விரோத காரணமாக பிளம்பரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சாமுவேல்,21; பிளம்பர். இவருக்கும் சாரம் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று வீட்டில் இருந்த சாமுவேலை, மாதேஷ் உட்பட 4 பேர் வெளியில் அழைத்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாதேஷ், சந்தோஷ், சக்தி , ஆகாஷ் ஆகியோர் சாமுவேலை தாக்கினர். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாமுவேல் புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாதேஷ் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.