sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை

/

புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை

புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை

புதிய பென்ஷன் திட்டம் பேராசிரியர்கள் கோரிக்கை


ADDED : செப் 11, 2024 11:27 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லுாரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில், புதுச்சேரியில் கடந்த 40 ஆண்டுகளாக 6 சொசைட்டி கல்லுாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லுாரிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2004ம் ஆண்டிற்கு முன் பணி அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், சொசைட்டி கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். இதனால் ஊழியர்கள் பணி ஓய்வு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

எனவே மத்திய அரசின் அறிவிப்பின்படி அரசு ஊழியர்கள், நகராட்சி ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தி உள்ளது போல், சொசைட்டி கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us