ADDED : மார் 30, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி முதல் நாளே மாணவர்களால் நிரம்பி வழிந்தது. மாணவர்கள், கல்வியாளர்கள் வழங்கிய குறிப்புகளை எழுதிக் கொண்டதுடன், தங்களுடைய மொபைல்போனிலும் பதிவு செய்து கொண்டனர்.
வெளியூர் சென்றுள்ள மாணவர்களுக்கு பதிலாக அவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். கல்வியாளர்கள் வழங்கிய கருத்துகளை கேட்டறிந்தனர். தொடர்ந்து சிலர் நேரடியாகவும் கல்வியாளர்களை அணுகி சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று திருப்தியடைந்தனர்.

