ADDED : மே 24, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்குமரன் 32, இவர் நேற்று முன்தினம் மதியம் உறுவையாறு - மங்கலம் சாலையில் நின்று கொண்டு அவ்வழி யாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்து மங்கலம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்ததால், போலீசார் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.