
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி,56; இவர் கடந்த 26ம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார். இவர் மீண்டும் வீட்டுக்கு வராததால், வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

