/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுடுநீரை ஊற்றிக்கொண்ட மூதாட்டி இறப்பு
/
சுடுநீரை ஊற்றிக்கொண்ட மூதாட்டி இறப்பு
ADDED : ஆக 13, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: செட்டிப்பட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, சுடு தண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம், கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை, 64. இவர் கடந்த 6ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சுடுதண்ணீரை உடலில் ஊற்றிக் கொண்டார்.
உடன் அவரை அருகில் இருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

