/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு
/
மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி கடை மூட உத்தரவு
ADDED : ஏப் 18, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரியாங்குப்பம் பகுதியில் 21ம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும் என, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாவீர் ஜெயந்தி விழா 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில், ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும். மேலும், கடைகளை திறந்து வியாபாரம் செய்ய கூடாது.
இவ்வாறு ஆணையர் கூறியுள்ளார்.

