ADDED : மே 24, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் பஸ் கண்டக்டர் இறந்தார்.
அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பை சேர்ந்தவர் வின்சென்ட், 40; இவர் தனியார் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மனஉளைச்சலில் இருந்த அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். அதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். நேற்று காலையில் அவரது மனைவி பார்க்கும்போது அவர் எழுந்திரிக்கவில்லை. உடன் அவரை அரசு மருத்துவ மனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

