ADDED : மார் 28, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நெட்டப்பாக்கம்ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமாரசுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கி நடந்து வருகிறது.
நேற்று சுவாமிக்கு சிவப்பு சாந்தி அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலை 9.00 சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், மாலை 6.00 மணிக்கு சாந்தி அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

