ADDED : ஜூன் 30, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணைத் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ. தலைமையேற்று திருபுவனை தொகுதியைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு, குடிசை மாற்று வாரியத்தின் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மூன்றாம் தவணை நிதியை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பாஸ்கர், திருபுவனை தொகுதி த.வெ.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
