sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் பெரியக்கடை போலீஸ் திடீர் சோதனை

/

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் பெரியக்கடை போலீஸ் திடீர் சோதனை

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் பெரியக்கடை போலீஸ் திடீர் சோதனை

அதிவேக வாகனங்களுக்கு அபராதம் பெரியக்கடை போலீஸ் திடீர் சோதனை


ADDED : ஜூன் 06, 2024 02:24 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: எஸ்.வி.பட்டேல் சாலையில் அதிவேகமாக வந்த வாகனங்களை மடக்கி பிடித்து போலீஸ் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள டிராபிக் போலீசார் கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதுதவிர, பைக் திருட்டுகளும் அதிக அளவில் நடந்து வருகிறது.

போக்குவரத்து போலீசாருடன் சட்டம் ஒழுங்கு போலீசாரும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்தனர். இதற்காக இ-சலான் இயந்திரமும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டது. சமீப காலமாக சட்டம் ஒழுங்கு போலீசார் இ-சலான் மூலம் அபராதம் வசூலிப்பதை நிறுத்தி வைத்திருந்தனர்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு, சட்டம் ஒழுங்கு போலீசார் அபராதம் விதிக்க சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், கடற்கரை ஒட்டியுள்ள செயின்ட் லுாயிஸ் வீதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டி வருவதாக, அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து போலீசுக்கு புகார் சென்றது.

இதைத் தொடர்ந்து, பெரியக்கடை போலீசார் எஸ்.வி.பட்டேல் சாலை, செயின்ட் லுாயிஸ் வீதி சந்திப்பில் திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us