sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சார்பு செயலர்கள் மீது விசாரணை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

/

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சார்பு செயலர்கள் மீது விசாரணை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சார்பு செயலர்கள் மீது விசாரணை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சார்பு செயலர்கள் மீது விசாரணை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்


ADDED : ஆக 12, 2024 05:02 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இட ஒதுக்கீட்டிற்கு எதிராகச் செயல்பட்ட சார்புச் செயலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் அறிக்கை:

புதுச்சேரியில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 சதவீதம், மீனவர்- 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 0.5 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்- 'பி' பதவிகளான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என மொத்தம் 529 பதவிகள் நிரப்ப கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.

அப்போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலர் 529 ஆசிரியர் பதவிகளுக்கு மேற்சொன்ன வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என, அறிவிப்பாணை வெளியிட்டார். இதேபோல், தற்போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் சார்புச் செயலர் 183 பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என அறிவிப்பாணை வெளியிட்டார்.

இந்த இரு அதிகாரிகளும் 70 சதவீத மக்களின் சட்ட உரிமையான இடஒதுக்கீட்டைப் பறித்துச் சமூக நீதியைக் குழித் தோண்டிப் புதைத்துள்ளனர். எனவே, அரசு சார்புச் செயலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us