sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

/

போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்


ADDED : ஆக 29, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனூர்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், கிராமத்தில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் தகவல்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.

தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா பேசுகையில் கிராமப் புறங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதனை ஒழிக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். வெளி நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் அதன் தண்டனைகள், போக்சோ சட்டப்பிரிவு மற்றும் புதிய குற்றவியல் சட்டப்பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us