sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருமணமான இரண்டு மாதத்தில் பெண் துாக்குபோட்டு தற்கொலை  கணவர் மீது போலீசார் வழக்கு

/

திருமணமான இரண்டு மாதத்தில் பெண் துாக்குபோட்டு தற்கொலை  கணவர் மீது போலீசார் வழக்கு

திருமணமான இரண்டு மாதத்தில் பெண் துாக்குபோட்டு தற்கொலை  கணவர் மீது போலீசார் வழக்கு

திருமணமான இரண்டு மாதத்தில் பெண் துாக்குபோட்டு தற்கொலை  கணவர் மீது போலீசார் வழக்கு


ADDED : மார் 27, 2024 07:18 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் திருமணமான 2 மாதத்தில் பெண் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, சோலை நகர், கல்லரை வீதி, 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 57; இவரது மகள் ரம்யா, 22; இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரை காதலித்தார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 22ம் தேதி செங்கேணி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

சோலை நகர் சுனாமி குடியிருப்பில் முதல் தளத்தில் தமிழ்மணி, ரம்யாவும், கீழ்தளத்தில் தமிழ்மணியின் தாய், தந்தை, அக்கா குடிருந்தனர்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் தகராறு நடந்து வந்தது.

கடந்த 24ம் தேதி மாமனார் பன்னீர்செல்வத்திற்கு போன் செய்த, தமிழ்மணி உங்கள் மகளுடன் வாழ முடியாது அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளார். அதனால் ரம்யாவை பன்னீர்செல்வம் தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரம்யா தனது சகோதரி சவுமியாவுக்கு, எனக்கு வாழ பிடிக்கவில்லை என குறுந்தகவல் அனுப்பிவிட்டு, வீட்டின் ஜன்னல் கம்பியில் புடவையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் தமிழ்மணியின் மீது மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிந்து அவரை தேடிவருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us