/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
/
பாரில் இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
ADDED : மார் 04, 2025 04:29 AM
பாகூர்: மதுபான கடையில், அடையாளம் தெரியாதவர் இறந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தனியார் மதுபான கடையில், நேற்று முன்தினம் மாலை மது குடிக்க வந்த அடையாளம் தெரியாத நபர், அங்குள்ள மேசையில் சாய்ந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
மதுக்கடை ஊழியர்கள் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, மதுக்கடை கேஷியர் ஜெகன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் உடலை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்த நபர் யார், எந்த ஊர், குடிபோதையில் இறந்தாரா என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.