நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் சொரப்பூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

