ADDED : ஜூலை 23, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.
மதியம் 1 மணிக்கு பெருமாளுக்கு மகா தீபாரதனையும், தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.