ADDED : மே 19, 2024 03:41 AM

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவி ஷாலினிதேவி 593 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார். மாணவி அபிராமி 590 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பரத்ராஜ் 584 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பிளஸ் 1 தேர்வில் இப்பள்ளி மாணவர் திலீபன் 586 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ராம்பிரகாஷ் 581 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் மனிஷ் அரவிந்த் 577 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
10ம் வகுப்பு தேர்வில் அபிஷேக் ஷர்மா 486 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் சூரியபிரகாஷ், மாணவி வர்ஷினி 483 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி ஓவியக்கனி 482 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். பள்ளி மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் கிருஷ்டி ராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வழங்கி பாராட்டினர். பள்ளி தாளாளர் கூறுகையில், '10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த கிராம புற மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றும் மகத்தான பணியை இப்பள்ளி செய்து வருகிறது' என்றார்.

