தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு


ADDED : ஆக 26, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகரப் பகுதியில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரியில் பேனர்கள் வைக்க தடை உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக வரும் புகார்கள் மீது போலீசாரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், ஜெயா நகர், மேட்டுப்பாளையம் சந்திப்புகளில் தடையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து உழவர்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா, ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அனுமதியின்றி பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us