ADDED : ஜூலை 19, 2026 08:52 PM

டிசி படம்: பாகூர்: கலாம் மக்கள் சமூக சேவை இயக்கம் சார்பில், மூர்த்திக்குப்பம் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.
காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், சமூகப் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் நடந்த விழாவிற்கு இயக்க தலைவர் சாண்டில்யன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முனியப்பன், நிர்வாகிகள் ரவீந்திரன், மகளிர் அணி தலைவி ஜமுனா ரவி, லதா குணசேகரன், பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உல்லாஸ் திட்டத்தின் மூலமாக, கல்வி பயின்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. துணைத் தலைவர் அரவிந்தன் ஒருங்கிணைப்பு செய்தார். இளைஞரணி தலைவர் ரோஷன், கணபதி, கவியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
