ADDED : ஆக 02, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்ளிருப்பு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் தொழுநோய் பிரிவு உதவி இயக்குநர் சிவராமன் தலைமை தாங்கி, தனது சொந்த செலவில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
