ADDED : ஆக 24, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை அமைச்சர் சாய்சரவணன்குமார் வழங்கினார்.
தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி பொறுப்பு ஆசிரியர் மனோன்மணி தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் சிவசங்கரி வரவேற்றார். அமைச்சர் சாய்சரவணன்குமார் பிளஸ் 1 மாணவர்களுக்கு லேப்டாப், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின்கோட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, கவிதா, ஜெகநாயகி, அனிதாமேரி, கலைவாணி, அன்புமதி, மகாதேவன், உதயகுமார், திவாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரவணன், ஏசுராஜ் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் சாம்சன் நன்றி கூறினர்.

