ADDED : செப் 01, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பில் திருபுவனை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதகடிப்பட்டில் உள்ள திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பயனாளிகள் 6 பேருக்குரூ.5.40 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் அன்பழகன், சுருதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.