ADDED : ஜூலை 27, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்துபிள்ளைபாளையம், அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சீருடை மற்றும் நாட்குறிப்பேடு வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா கிருஷ்ணபிரசாத் வரவேற்றார். வட்ட துணை ஆய்வாளர் செல்வி முன்னிலை வகித்தார். விழாவில், நாராயணசாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நாட்குறிப்பேடு மற்றும் அடையாள அட்டை வழங்கினார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள் சுகாஷினி, காயத்திரி, பூவிழி, ஆனந்தி உள்ளிட்ட என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
