/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் அலையில் சிக்கி புதுச்சேரி பெண் பலி
/
கடல் அலையில் சிக்கி புதுச்சேரி பெண் பலி
ADDED : மே 22, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : புதுச்சேரி பெண், கோட்டக்குப்பத்தில் கடல் அலையில் சிக்கி இறந்தார்.
புதுச்சேரி பெரிய காட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் குணாநந்தம் மனைவி சந்திரா,50; இவர் நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தில் உள்ள மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று காலை 5:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள கடற்கரை ஓரம் இயற்கை உபாதை கழிக்க சென்றவர், கடல் அலையில் சிக்கி காணாமல் போனார்.
உறவினர்கள் கடற்கரை பகுதியில் தேடியபோது மதியம் 12:30 மணிக்கு சந்திரா உடல் கரை ஒதுங்கியது.
கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

