sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் பழுது போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீஸ் திணறல் 

/

மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் பழுது போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீஸ் திணறல் 

மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் பழுது போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீஸ் திணறல் 

மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் பழுது போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீஸ் திணறல் 


ADDED : மே 24, 2024 03:56 AM

Google News

ADDED : மே 24, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மின் கசிவால் ராஜிவ் சிக்னல்கள் அனைத்தும் எரிந்து பழுதானதால், போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னல் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. கோரிமேடு, வழுதாவூர், நுாறடிச்சாலை, இ.சி.ஆர்., காமராஜர் சாலை என 5 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதி என்பதால், டிராபிக் ஜாமிற்கு பஞ்சமில்லை.

ஒவ்வொரு நிமிடமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கிறது. இங்குள்ள சிக்னல் சிலதினங்களுக்கு முன்பெய்த லேசான மழையில் ஏற்பட்ட மின்கசிவால் எரிந்து பழுதானது. இதனால் 5 சாலைகளில் ஏற்படும் டிராபிக்கை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஏற்கனவே உள்ள 27 டிராபிக் சிக்னல்களை மாற்றி புதிதாக அமைக்கவும், கூடுதலாக 9 சிக்னல் அமைக்க ரூ.3 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு டெண்டர் விடும் பணி நடக்கிறது. இதனால், பழுதான சிக்னல்களை சரிசெய்ய முடியாத நிலை உள்ளது.

சிக்னல் பழுது, சாலையில் பெயிண்ட் பூசுதல், எச்சரிக்கை பலகை அமைக்க போக்குவரத்து எஸ்.பி.க்கு ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் சிக்னல்பழுதுகளை, அந்தந்த போக்குவரத்து போலீசார் சரிசெய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வடக்கு போக்குவரத்து போலீசார் சிக்னல் பழுதை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us