/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெற்றோர் இறந்த சோகம் மகன் தற்கொலை
/
பெற்றோர் இறந்த சோகம் மகன் தற்கொலை
ADDED : செப் 09, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் தாய், தந்தை இறந்த வேதனையில் மகன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், பார்வதீஸ் வரர் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன், 45; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ரவீந்திரன் மது அருந்துவது வழக்கம்.
இவரது தாய், தந்தை இறந்ததால் மனவேதனையில் சரியாக வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையானார். நேற்று முன்தினம் ரவீந்திரன் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.