ADDED : ஜூலை 08, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் செம்பியன் மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விளக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தெய்வகுமாரி, அன்பு மொழி ஆகியோர் செய்திருந்தன.