ADDED : செப் 16, 2024 05:51 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் கோடைக்காலம் முடிந்த பின்பும் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
புதுச்சேரியில் கோடைக்காலம் முடிந்து, கடந்த சில தினங்களாக இரவில் மழை பெய்து வந்தது. இந்த மழையும் தொடர்ந்து நீடிக்கவில்லை.
அதற்கு மாறாக கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் 90 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டிவதைத்தது.
வெயிலின் தாக்கத்தினால் வீட்டில் உள்ள முதியவர்கள், குழந்தைகள் அவதியடைந்தனர்.
மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
