sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 154 நுண்பார்வையாளர்கள் தேர்வு

/

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 154 நுண்பார்வையாளர்கள் தேர்வு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 154 நுண்பார்வையாளர்கள் தேர்வு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 154 நுண்பார்வையாளர்கள் தேர்வு


ADDED : ஏப் 14, 2024 05:21 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 154 நுண்பார்வையாளர்கள் தற்செயல் கலப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு வரும் 19ம் தேதி நான்கு பிராந்தியங்களில் நடக்கிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 739 ஓட்டுசாவடிகளில், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 138 இடங்களில் 180 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளைக் கண்காணிப்பதற்காக 154 நுண்பார்வையாளர்களை தேர்வு செய்வதற்கான தற்செயல் கலப்பு, தேர்தல் பொதுப் பார்வையாளர் பியுஷ் சிங்லா, தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் முன்னிலையில் நேற்று நடந்தது.

மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி வினயராஜ், மனிதவள நோடல் அதிகாரி முத்துமீனா கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us