
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திய கம்யூ., கட்சி சார்பில், காரல் மார்க்ஸின் 206வது பிறந்த ஆண்டு கருத்தரங்கம் முதலியார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கருத்தரங்கிற்கு, மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., தமிழ்நாடு கட்டுப்பாட்டு குழுத் தலைவர் சுப்பராயன் எம்.பி., பேசினார்.
கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார்.
தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளர் சேது செல்வம், மாநில நிர்வாக்குழு உறுப்பினர்கள் அந்தோணி, ரவி, அமுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.