/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க கோரிமேட்டில் தனி வார்டு அமைப்பு
/
குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க கோரிமேட்டில் தனி வார்டு அமைப்பு
குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க கோரிமேட்டில் தனி வார்டு அமைப்பு
குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க கோரிமேட்டில் தனி வார்டு அமைப்பு
ADDED : செப் 16, 2024 05:18 AM

புதுச்சேரி, : குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க கோரிமேடு மார்பக மருத்துவமனையில் 10 படுக்கை கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை தடுப்பு வழி முறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்தது. இதில் துணை இயக்குனர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி , ஜிப்மர் மருத்துவ கல்லுாரிகளின் பிரிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரியில் குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து குரங்கு அம்மை குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குரங்கு அம்மை என்பது பெரியம்மை போன்ற அறிகுறிகளை கொண்ட வைரஸ் நோய். அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மூன்று கண்டங்களில் குரங்கு அம்மை நோய் தொற்று உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் அறிகுறிகளோடு உள்ள ஒரு நபர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பின் பாதிப்பு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி குரங்கு அம்மைக்கு பாதிப்படைந்தவர்களுக்கு சிகீச்சை அளிக்க 10 படுக்கை கொண்ட வார்டு கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து டாக்டர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் அனத்து முன் நிலை சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் குரங்கு அம்மை பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

