ADDED : மார் 28, 2024 04:29 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி காங்., பொதுச் செயலாளர் சங்கர், ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் 25 லோக்சபா தொகுதிகளுக்கும், 170 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 13ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்., பொதுச் செயலாளர் சங்கர், ஆந்திர மாநில லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் அகில இந்திய காங்., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்.,பொது செயலாளர் வேணுகோபால் எம்.பி., வெளியிட்டுள்ளார்.
ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சங்கருக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
