sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடையில் லேப்டாப் திருட்டு: கேரளா நபருக்கு வலை

/

கடையில் லேப்டாப் திருட்டு: கேரளா நபருக்கு வலை

கடையில் லேப்டாப் திருட்டு: கேரளா நபருக்கு வலை

கடையில் லேப்டாப் திருட்டு: கேரளா நபருக்கு வலை


ADDED : மே 30, 2024 04:47 AM

Google News

ADDED : மே 30, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஜூஸ் கடையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் திருடிய கேரளா நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோரிமேடு, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர் விஜயராஜ், 30; தனது வீட்டின் முன்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த சாதிக் அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் வந்து வேலை கேட்டார். விஜயராஜ் தனது கடையில் சாதிக் மற்றும் அவரது மனைவியை வேலைக்கு அமர்த்தினார். இருவரின் அடையாள அட்டைகளை கொடுக்கவில்லை.

கடந்த 22ம் தேதி விஜயராஜ் வெளியூர் சென்றதால், சாவியை சாதிக்கிடம் கொடுத்து விட்டு சென்றார்.

அன்று இரவு கடையின் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை, விஜயராஜ் தனது மொபைல்போன் மூலம் பார்த்தபோது, சாதிக் கடை மேஜை மீது வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள லேப் டாப்பை எடுத்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. உடனடியாக கடைக்கு திரும்பிச் சென்று பார்த்தபோது, சாதிக் மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக்கை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us