sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

/

லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்

லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : மே 28, 2024 04:53 AM

Google News

ADDED : மே 28, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : டோல்கேட் அருகே லாரியை நிறுத்தி லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், போலீஸ்காரர் அப்துல்ரஷீத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மொரட்டாண்டி டோல்கேட் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே சென்ற லாரியை நிறுத்தி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அதனைத் தொடர்ந்து இருவரையும் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றி எஸ்.பி., தீபக்சிவாச் நேற்று காலை உத்தரவிட்டார். மேலும், புகார் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் விசாரணை நடத்தி வருகிறார். புகார் உறுதி செய்யப்பட்டால் 'சஸ்பெண்ட்' செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us