ADDED : மே 07, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரியாங்குப்பம் தபால்காரர் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் கிரிதரன்,21; இவர், திருநங்கையுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.