வரும் 24ம் தேதி பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அன்பழகன் ‘தகவல்’
வரும் 24ம் தேதி பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அன்பழகன் ‘தகவல்’
ADDED : ஆக 07, 2026 05:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்ட தொடர் வரும் 24ம் தேதி காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையுடன் துவங்கவுள்ளதாக, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்தார்.
இது குறித்து அவர், கூறியதாவது;
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்ட தொடர் கடந்த மே 20ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, புதிதாக தேர்வான உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்த பின், சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சட்டப்பேரவை கூட்ட தொடர் வரும் 24ம் தேதி காலை 9:30 மணிக்கு கூட்டப்படுகிறது. அன்று, கவர்னர் உரையாற்றுகிறார். பின், மாலை 3:00 மணிக்கு, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் 2026–27 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார். இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டம், எத்தனை நாள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்’ என்றார்.
