sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேச்சு

/

புதுச்சேரி கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேச்சு

புதுச்சேரி கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேச்சு

புதுச்சேரி கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேச்சு


ADDED : மார் 15, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., பேசினார்.

ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., பேசியது:

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் பல சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன. இந்த கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளில் பாடங்கள் டிஜிட்டல் முறையிலும் வழங்கப்படுவது போன்ற முக்கியமான வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கொள்கையில் தான் இதற்கு முந்தைய கல்விக் கொள்கையில் இல்லாத வகையில் தாய் மொழியில் கல்வியை கற்பதற்காக வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.எஸ்.இ., திட்டம் அறிமுகப்படுத்திவிட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கையின்படி தமிழ் வழி கல்வி செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏற்கனவே நிதிச்சுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற புதுச்சேரி மாநிலம் இதற்கான கணிசமான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரி மாநிலத்தில் வெற்றிகரமாக அமலாக்க பள்ளியின் உள் கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இதற்கு தேவைப்படும் சிறப்பு நிதியை ஓதுக்கி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us