/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : மார் 09, 2025 03:58 AM
புதுச்சேரி : மகளிர் தினத்தையொட்டி, புதுச்சேரி நியூ மெடிக்கல் சென்டர் சார்பில் போலீசில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கோரிமேட்டில் நடந்த முகாமில், பெண் காவலர்களுக்கு உடல் எடை, ரத்த பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை, மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நியூ மெடிக்கல் சென்டர் டாக்டர்கள் நித்யா, பூஜா, விஷ்ணு, மேலாளர்கள் பாத்திமா, அய்யனார் தலைமையில் முகாம் நடந்தது.
தொடர்ந்து பெண் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 40 வயதிற்கு பின்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் குறித்தும் முகாமில் வலியுறுத்தி ஆண்டு தோறும் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினர்.