/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் புதுச்சேரியில் 15ம் தேதி நடக்கிறது
/
சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் புதுச்சேரியில் 15ம் தேதி நடக்கிறது
சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் புதுச்சேரியில் 15ம் தேதி நடக்கிறது
சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் புதுச்சேரியில் 15ம் தேதி நடக்கிறது
ADDED : மார் 12, 2025 06:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரியில் பங்கேற்கும் திண்டிவனம் சீனிவாசப் பெருமாளுக்கு வரும் 15ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரி அலர்மேல் மங்கா சமேத சீனிவாசப் பெருமாள் மாசிமக கடல் தீர்த்தவாரி கமிட்டி கவுரவத் தலைவர் வீரா வேங்கடேச ராமானுஜதாசர் கூறுகையில்;
திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் அமைந்துள்ள அலர்மேல் மங்கா சமேத சீனிநிவாசப் பெருமாள், மாசிமக கடல் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்க வரும் 13ம் தேதி மாலை 5:30 மணிக்குபுதுச்சேரி வருகிறார்.
எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள சிருங்கேரி மடம் சாரதாம்பாள் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் தீர்த்தவாரியில் பங்கேற்று, அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியார் திருமண மண்டபம் திரும்பும் சுவாமிக்கு, மாலை 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 15ம் தேதி காலை 10:30 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.16ம் தேதி காலை 10:00 மணிக்கு, உலக நன்மைக்காக மகா சுதர்ஸன ேஹாமம் வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
பேட்டியின்போது, தீர்த்தவாரி கமிட்டி உபதலைவர் ராதாகிருஷ்ணன், வெங்கடாஜலபதி, ராமராஜ், கிருஷ்ணசாமி, செயலர்கள் சிவானந்தம், பாஸ்கரன், நடராஜன், துரை, செயற்குழு உறுப்பினர்கள் தேவநாதன், கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.