/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
/
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : ஆக 22, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதலிடம் பிடித்த விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
லாஸ்பேட்டை, செல்லப் பெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தேசிய விமானப்படை இளநிலை பிரிவு மாணவர்கள் சுதந்திர தின விழா குழு அணிவகுப்பில் பங்கேற்றனர். இதில், முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர். அவர்களை பள்ளி தாளாளர் செல்கணபதி எம்.பி., பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் பாராட்டி, கவுரவித்தனர்.