ADDED : ஜூலை 28, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கலாம் மக்கள் சமூக சேவை இயக்கம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது.
காட்டுக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் சாண்டில்யன் தலைமை தாங்கினார். துரைசாமி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பொதுச் செயலாளர் முனியப்பன் தலைமையில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ரவீந்திரன், நடராஜன், ரமேஷ், சரவணன், மகளிரணி ஜமுனாரவி, லதா, பவித்ரா, பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, துணைத் தலைவர் அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
