ADDED : ஜூலை 14, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடன் பிரச்னையில் டீ கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை, சாந்தி நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 42; டீ கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், சரியாக டீ கடையை நடத்த முடியாமல் வீட்டில் இருந்தார்.
வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.